தயாசிறி ஜயசேகர வடமேல் மாகாண முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவர் இம்முறை பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தி்ற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய நாடாளுமன்றம் நாளை கூடவுள்ள நிலையில், அவர் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தயாசிறி ஜயசேகரவுக்கு பிரியாவிடையளிக்கும் நிகழ்வு குருணாகல் நகர மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகர விருப்பு வாக்குகளின் அடிப்படையில் இரண்டாம் இடத்தை பெற்றார்.