ஜெர்மனிய வெளிவிவகார அமைச்சர் டொக்டர் பிரான்க் வோல்டர் ஸ்டின்மியர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் 22ம் திகதி வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜெர்மனிய தூதரகம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
ஜெர்மன் வெளிவிவகார அமைச்சர் கிளிநொச்சிக்கும் விஜயம் செய்ய உள்ளார். எதிர்வரும் 2016ம் ஆண்டு மே மாதம் ஜெர்மன் இலங்கை பயிற்சி நிறுவகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட உள்ள நிலையில், நிறுவகத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் நேரில் பார்வையிட உள்ளார்.