சூர்யா நடிப்பில் உருவாகி வரும் பிசிங்கம் 3பீ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்த நிலையில், படத்தில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. இதற்கிடையில் சூர்யா தனது அடுத்தப் படத்திற்கு தயாராகிவிட்டார். நயந்தராவின் காதலர் விஷ்னு சிவன் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும், சூர்யாவின் 2டி நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றது
விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில், படத்தின் தலைப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிதானாசேர்ந்தகூட்டம்பீ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, அஜித், விஜய் என்று முன்னணி நடிகர்களின் படங்களுக்கு படத்தின் ஆரம்பத்திலேயே தலைப்பு வைப்பது என்பது தமிழ் சினிமாவில் அறிதான ஒன்றாகிவிட்ட நிலையில், சூர்யா தனது படத்தின் தலைப்பை ஆரம்பத்திலேயே அறிவித்தது பாராட்டக்குறியதுதான்.
அஜித் மற்றும் விஜய் இருவரும் தொடர்ந்து தங்களது படத்தின் தலைப்பை ஆரம்பத்தில் அறிவிக்காமல், தங்களது பட்டப் பெயருடன் எண்களை வைத்து விளம்பரப் படுத்தி வருகிறார்கள், பிறகு ஏதாவது சர்ச்சையான தகவலை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திக்கொள்வதோடு, படப்பிடிப்பு முழுவதும் முடிந்த பிறகோ அல்லது முடியும் தருவாயில் உள்ள நிலையிலேயோ தலைப்பை அறிவிக்கிறார்கள்.
ஆனால், சூர்யா அவர்களைப் போல அல்லாமல், படத்தின் ஆரம்பத்திலேயே தலைப்பை அறிவித்து விஜய், அஜிதால் செய்ய முடியாததை செய்துவிட்டார்