எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் :நாட்டில் மட்டுமல்ல உலகத்தையும் ஆட்டிப் படைக்க கூடிய நபர்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியின் சார்பில் பொது வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட உள்ளதாகவும் அவர் நாட்டில் மட்டுமல்ல உலகத்தையும் ஆட்டிப் படைக்க கூடிய நபர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரே அந்த நபர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் போட்டியிட உள்ளமைக்கான அடையாளங்கள் தென்பட்டுள்ளன.
இவர்கள் இருவரும் நாட்டில் சிறுபான்மையாக மாறியுள்ள அரசாங்கத்தின் ஆதரவாளர்களின் அணி என்பதால், நாட்டில் காணப்படும் அரசாங்கத்திற்கு எதிராக பெரும்பான்மை பலத்தை கொண்ட பொது வேட்பாளரை கூட்டு எதிர்க்கட்சி நிறுத்தும் எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.