ஏழு மாகாண முதலமைச்சர்கள் மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளதாகத் தகவல்!
ஏழு மாகாணங்களின் முதலமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவை சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பு எதிர்வரும் சில தினங்களுக்குள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வடக்கு, கிழக்கு தவிர்ந்த ஏனைய ஏழு மாகாணங்களான மேல், தென், மத்திய, வடமத்திய, வடமேல், ஊவா மற்றும் சப்பரகமுவ மாகாண முதலமைச்சர்களே மஹிந்தவைச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் சமகால அரசியல் நிலவரம் மற்றும் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் இந்தச் சந்திப்பின்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் நீடித்துவரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருது குறித்தும் மஹிந்தவுடன், மாகாண முதலமைச்சர்கள் கலந்துரையாடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.