எதிர்கட்சித் தலைவருக்கும், பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றது.
நேற்று பிற்பகல் விஜேராமையில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் கடற்படை தளபதி அத்மிரால் வசந்த கரன்னாகொட உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர்.
இதன்போது, தமது கடந்த கால அனுபவங்களை பயன்படுத்தி, அடிப்படை வாதத்தை ஒழிப்பதற்கு அறிக்கை தயாரிக்குமாறு எதிர்கட்சித் தலைவர், பாதுகாப்பு பிரிவின் முன்னாள் பிரதானிகளிடம் கோரியுள்ளார்.