முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகளின் பத்தாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் நடைபெற்றது.முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான என்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் இலங்கையின் எட்டு மாவட்டங்களில் நடைபெற்றுவருகின்றது.
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிகழ்வு கல்லடி கடற்கரையில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான என்.கே.சிவாஜிலிங்கம்,முன்னாள் கிழக்கு
மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் உட்பட தவிசாளர்கள்,பிரதேசசபை,மாநகரசபை உறுப்பினர்கள்,கட்சி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.இதன்போது முள்ளிவாய்க்கால் உட்பட வடகிழக்கில கொல்லப்பட்ட புலிகளுக்காக இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.