சட்டமுரணாக தங்கியிருந்து நாட்டில் தொழில் புரியும் வெளிநாட்டவர்களை உடனடியாக வெளியேற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.
முறையான விசா அனுமதி பத்திரம் இன்றி மத பாடசாலைகளிலும் சில நிறுவனங்களிலும் வெளிநாட்டவர்கள் பணியாற்றுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.