தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் இறுதி நாள் மாநாடு கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் தற்போது இடம்பெற்று வருகின்றது.
இதன் போது போதைப் பொருள் பாவனை பரவல் தொடர்பான தேசிய ஆய்வு அறிக்கை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
போதைப் பொருள் ஒழிப்பு ஜனாதிபதி விசேட செயலணி, தேசிய அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு சபை மற்றும் காவற்துறை என்பன இணைந்து இந்த அறிக்கையை தயாரித்துள்ளன.