எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் ஒன்று இதுவரையில் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்தில் நேற்று(30) கூடிக் கலந்துரையாடிய போதிலும் எவ்வித இறுதித் தீர்மானமும் இன்றி கூட்டம் நிறைவு பெற்றதாக கூட்டமைப்பின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.