நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களின் போது உயிரிழந்தவர்களுக்கு
தலா ஒரு மில்லியன் ரூபாயை இழப்பீடாக வழங்குதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதனுடன் இறுதி சடங்குளுக்காக ஒரு லட்சம் ரூபாயை வழங்குதற்கு இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை இழப்பீடாக வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.