Titleபாலியல் குற்றங்களை விசாரணை செய்ய விசேட நீதிமன்றம்: ரணில்!
Published on August 9 2015
பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய விசேட நீதிமன்றம் ஒன்று, புதிய அரசாங்கத்தின் கீழ் உருவாக்கப்படவுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தொட்டையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார். பாலியல் துஸ்பிரயோகங்கள் சம்மந்தமான வழக்குகளை துரிதமாக விசாரணை செய்து நிறைவு செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் மகளிர் காவற்துறையினரின் பிரச்சினைகள் தொடர்பிலும் விசேட அவதானம் செலுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
/image%2F1796264%2F20220922%2Fob_7c6c36_3nbqqbo1-400x400.jpg)
