El Salvador prison gang violence kills 14
எல் சல்வடோர் சிறையில் இரு கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அந்த நாட்டை சேர்ந்த 14 கைதிகள் பலியானதாக தெரியவந்துள்ளது. தலைநகர் சான் சல்வடோரின் வடக்கு பகுதியில் இருக்கும் ஒரு சிறையில், அந்த நாட்டை சேர்ந்த கொடூரமான இரண்டு கும்பல்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் குறைந்தது 14 கைதிகள் கொல்லப்பட்டதாகவும், பலரது உடல்கள் சிறையில் இருக்கும் குப்பை தொட்டியிலிருந்து எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பல்வேறுப்பட்ட ரவுடி கும்பல்களுக்கு இடையே ஏற்படும் வன்முறைக்கு பெயர் பெற்ற நாடு எல் சல்வடோர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை மட்டும் இது தொடர்பாக 3,332 கொலைகள் நடந்துள்ளன. அந்த நாட்டில் மொத்தமாக 72 ஆயிரம் பேர் வன்முறை கும்பல்களில் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்களில் 13 ஆயிரம் பேர் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.