தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ்.வேட்பாளர் சுமந்திரனின் பிரச்சாரக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளினில ஈடுபட்ட முக்கிய யொருவரது வீடு நேற்றிரவு தாக்கப்பட்டுள்ளது.கரவெட்டி கிழவி தோட்டம் பகுதியினில் நேற்று சுமந்திரன் பிரச்சார கூட்டமொன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். அதற்கான ஏற்பாடுகளினில் ஈடுபட்டிருந்த நாதன் என்வரது வீடே தாக்கப்பட்டுள்ளது.கூட்டம் ஆரம்பமாவதற்கு சற்று முன்னர் தாக்குதலாளிகள் வீட்டின் மீது முதலில் தாக்கியுள்ளனர்.பின்னர் மீண்டும் ஒரு மணிநேர இடைவெளியின் பின்னர் மீண்டு வந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலாளிகள் வீட்டினுள் புகுந்த தாக்க முற்பட்டவேளை பெண்கள் அவலக்குரல் எழுப்பியதாகவும் அதையடுத்து அவர்கள் வெளியேற விட்டதாக அயலவர்கள் கூறுகின்றனர்.இதையடுத்து கூட்டத்திற்கு பாதுகாப்பிற்கு வந்திருந்த காவல்துறையினர் குறித்த வீட்டிறகு பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.;தொடர்ந்து நடந்த கூட்டத்திற்கும் சொல்லிக்கொள்ளத்தக்கதாக மக்கள் வந்திருக்கவில்லையென கூறப்படுகின்றது. முன்னதாக சுமந்திரனை புறக்கணிக்க கோரும் வடமராட்சி பொது அமைபபுக்களது ஒன்றிய துண்டுபிரசுரங்கள் விநியோக குழுவொன்று தயார் நிலையினில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.