ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். எதிராளிகள் செயற்படும் வாய்ப்பு குறைந்த நேரத்தை தெரிவு செய்து, ஜனாதிபதி தனது திட்டத்தை செயல்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில், தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய வெற்றியை பெறும் என்பதுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடும் வீழ்ச்சியை சந்திக்கும். இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தல் நெருங்கும் தருவாயில் தனது பீ திட்டத்தை மைத்திரிபால செயல்படுத்தியுள்ளார்.
சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர்களை நீக்கியது மாத்திரமல்லாது, அவர்களை கட்சியின் அங்கத்துவத்தில் இருந்தும் மைத்திரி நீக்கியுள்ளார். இதன் மூலம் கட்சியின் அதிகாரத்தை கைப்பற்றும் ஜனாதிபதிமைத்திரியின் திட்டம் தெளிவாகியுள்ளது. இதற்கு எதிராக மகிந்த ராஜபக்ச அணி சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வாய்ப்பிருந்த போதிலும் தேர்தல் முடிவுகளின் பின்னர், மைத்திரிபால மேலும் பலமடைவார் என அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.