தேர்தலுக்கு பின்னரான அதிக அளவு வன்முறை சம்பவங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களிலேயே பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி இதனைத் தெரிவித்துள்ளார். இதுவரையில் இவ்வாறான 10 சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், இதற்கு முன்னர் இடம்பெற்ற பொதுத் தேர்தலுக்கு பினனரான வன்முறைகளுடன் ஒப்பிடும் போது, இந்த முறை மிக சொற்பமான வன்முறைகளே இம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் தேர்தலுக்கு பின்னரான 20 வன்முறை சம்பவங்கள் குறித்து காவற்துறையில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேத்தில் இரண்டு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதலொன்று பதிவாகி இருக்கிறது. இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.