ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் புதிய முன்னணி ஒன்றை உருவாக்கத் தீர்மானித்துள்ளன. புதிய அரசியல் முன்னணி ஒன்றை உருவாக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி நாடாளுமன்றில் எதிர்க்கட்சியாக செயற்பட உள்ளது. மஹஜன கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, ஸ்ரீலங்கா கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜ கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இவ்வாறு தீர்மானித்துள்ளன.
வெற்றிலைக்கு வாக்களித்த மக்களி;ன் எதிர்பார்ப்புக்களை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினால் நிறைவேற்ற முடியாவிட்டால்ää அதனை செய்யக்கூடிய புதிய அரசியல் முன்னணி ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியமானது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இவ்வாறு புதிய அரசியல் முன்னணி ஒன்றை அமைப்பதற்காக நோக்கமும் திட்டமும் உண்டு. தேர்தல் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்பட்ட விதமே தோல்வியடைவதற்கான காரணமாகும் என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.