புலம்பெயர்ந்த புலிகளுக்கு ஆதரவான அமைப்புகளுக்கு எதிரான புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக
இராணுவப் பேச்சாளர் ஜெயநாத் ஜெயவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
புலம்பெயர்ந்த புலிகளுக்கு ஆதரவான தமிழ் அமைப்புகளை கண்காணிப்பதற்காக பல நாடுகளில் இராணுவ புலனாய்வாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்த விபரங்கள் புலம்பெயர்ந்த அமைப்பொன்றுக்கு கசிந்திருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகி இருந்தன.
எனினும் இதனை அவர் மறுத்துள்ளார். தொடர்ந்து இராணுவ புலனாய்வாளர்கள் தடையின்றி தங்களின் புலனாய்வு பணிகளை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.