அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட பிரேரணைகள் சமர்ப்பிப்பதற்கு முன்னர், அரச தனியார் அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் ஆலோசனைகளை நிதி அமைச்சு கோரியுள்ளது. அவற்றின் மூலம் பெறப்படும் ஆக்கபூர்வமான விடயங்கள் வரவு செலவுத் திட்ட பிரேரணைகளில் உள்வாங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 60 மாத காலப்பகுதியினுள் மேற்கொள்ளப்படும் ஐந்து அம்ச திட்டத்தினை சிறந்த முறையில் அமுல்படுத்துவதற்கு ஏற்ற பிரேரணைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளன.
பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், ஊழலுக்கு எதிரான செயல்பாடு, சுதந்திரத்தை பேணுதல், உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்தல் மற்றும் முதலீட்டை மற்றும் கல்வி நடவடிக்கைகளை ஊக்குவிக்கும், ஐந்த அம்ச திட்டங்கள் குறித்த பிரேரணைகள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், வர்த்தக சம்மேளனங்கள், தொழில்சார் நிபுணர்கள், புத்திஜீவிகள் போன்றவர்கள் தமது பரிந்துரைகளை அனுப்பி வைக்க முடியும் என அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேரணைகளை நிதி அமைச்சின் வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கைப்பிரிவிற்கு அனுப்பி வைக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.