அகில இலங்கை தமிழ் மொழித் தினப் போட்டி மட்டக்களப்பில் முதல் தடiவாயக கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களில் நடைபெற்றது. கல்வியமைச்சு தேசிய மட்டத்தில் நடாத்திய இந்த தேசிய மட்டத்திலான தமிழ் மொழித் தினப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு காலை மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா வித்தியாலய தேசியப் பாடசாலையில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுhலனந்தர் மண்டபத்தில் நடைபெற்றது. கல்வியமைச்சின் மானுடவியல் மரபுரிமைகள் பிரிவு பணிப்பாளர்
ஆர்.எம்.ரத்நாயக்கா தலைமையில் நடைபெற்ற இதன் ஆரம்ப வைபத்தில் கல்வியமைச்சின் தமிழ் பிரிவுக்கு பொறுப்பான பிரதி பணிப்பாளர் எஸ்.முரளிதரன், கிழக்கு மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் என்.மனோகரன், மட்டக்களப்பு வலயக் கல்விப்பாளர் கே.பாஸ்கரன், இராம கிருஸ்னமிஸன் தலைவர் சுவாமி சதுர்புஜானந்த ஜீ, சப்பிரகமுவ மாகாண பௌத்த சிங்கள பிரிவுக்குப் பொறுப்பான கல்விப்பணிப்பாளர் பஞ்சலங்க தேரோ உட்பட மாகாண கல்வி அதிகாரிகள், கல்விப்பணிப்பாளர்கள் அதிபார்கள் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் ஆரம்ப நிகழ்வையொட்டி அதிதிகள் ஊர்வலமாக தமிழ் பாரம்பரிய முறைப்படி பிரதான மண்டபம் வரை அழைத்துச் செல்லப்பட்டனர். இம் முறை நடைபெற்ற அகில இலங்கi தமிழ் மொழி தினப் போட்டியில் இலங்கையின் 9 மாகாணங்களில் இருந்தும் 800 மாணவர்கள் போட்டியாளர்களும், 500 மத்தியஸ்தர்கள் அதிகாரிகள், ஆசியர்கள் கலந்து கொண்டனர். 24 பிரிவுகளாக இந்தப் போட்டிகள் நடைபெற்றன. இம்முறை மட்டக்களப்பு கல்வி வலயம் கல்வியமைச்சுடன் இணைந்து அகில இலங்கை தமிழ் தினப் போட்டியினை நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.