யாழ்.பருத்தித்துறை வீதியில் புத்தூர்- ஆவரங்கால் பகுதியில் பாரவூர்தி ஒன்றும் பயணிகள் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த சம்பவம் காலை 10.45 மணியளவில் இட்பெற்றுள்ளது. சம்பவத்தில் பேருந்தில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் விபரம் உடனடியாக வெளியாகவில்லை. இந்நிலையில் பேருந்தில் சுமார் 40 பேர் பயணித்ததாகவும் சம்பவத்தில் 32 பேர் வரையில் காயமடைந்துள்ள நிலையில் 21 பேர் யாழ்.போதான வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும். சிலர் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகளுக்கு உயிர் இழப்புக்கள் எவையும் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. தற்போது கிடைத்த தகவலின் படி காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ள நிலையில் அச்சுவேலி, கோப்பாய் வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களும் யாழ்.போதனாவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவு வைத்திய அதிகாரி எஸ்.யமுனானந்தா தெரிவித்துள்ளார். இதன்படி 3 சிறார்கள் உட்பட 11ஆண்களும், 21 பெண்களுமாக 32 பேர் காயமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.