முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை டில்லியில் சந்தித்துப் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டில்லியில் இன்று அனைத்துலக இந்து – பௌத்த மாநாடு வியாழக்கிழமை தொடங்கி வரும் 5ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து முக்கியமாகப் பேசப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது