இரத்மலானையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட விமானப்படை நீச்சற் தடாக கட்டிடத் தொகுதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் நேற்று முன் தினம் (செப்டம்பர். 08) திறந்துவைக்கப்பட்டது. இந்நீச்சற் தடாகம் 50 மீட்டர் நீளமும் 25 மீட்டர் அகலமும் 1.4 மீட்டர் ஆழமும் கொண்டது. அத்துடன் இத் தடாகம் 10 நீச்சற் பாதைகளை கொண்டுள்ளுமை குறிப்பிடத்தக்கது. மேலும், அனைத்து வசதிகளுடன் கூடிய இத்தடாகம் நீச்சற் போட்டிகள் தண்ணீர் போலோ, சுழியோடல், மற்றும் உயிர்க்காப்பு பயிற்சி உட்பட பல்வேறு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது.
அத்துடன் நிர்வாகக் கட்டுப்பாட்டு அலகுகள், சட்டவிரோத பொருள்களை பரிசோதனை செய்யும் பகுதி,விஷேட பிரமுகர்களை வரவேற்கும் பகுதி, முதலுதவிக்கான பகுதி,கேட்போர் கூடம் மற்றும் விளையாட்டு விரர்கள் தங்குவதற்கான வசதிகள் ஆகியவற்றை கொண்டுள்ளதுடன் ஓரே நேரத்தில் 1000 பார்வையளர்கள் பார்வையுடக்கூடிய வசதிகளையும் கொண்டுள்ளது. இந் நீச்சற் தடாக கட்டிடத் தொகுதி விமானப்படை கட்டிட நிர்மாண பொறியியல் பிரிவின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்டது.
மேலும் 162 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்நீச்சற்தடாகம் இலங்கை விமானப்படையின் நீச்சல் மற்றும் நீரியல் சார் விளையாட்டுக்களின் தரத்தை மேம்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் விமானப்படையானது நீரியல் விளையாட்டுத் துறையில் பல திறன்மிக்க விளையாட்டு வீர வீராங்கனைகளை உருவாக்கியதுடன் 2011ம் ஆண்டு “ ப்ரீ ஸ்டைல்” 50 மீட்டர் நீச்சற் போட்டியில் தேசிய சாதனை பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திரு.பிஎம்யூடி பஸ்நாயக, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் ககன் புளத்சிங்கள, சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகள் மற்றும் விமானப்படை வீரர்களும் கலந்து கொண்டனர்.