இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் அமெரிக்கா பின்வாங்குவதாக, போர்க் குற்ற ஆவணப்படங்களை வெளியிட்ட இயக்குநர் கலம் மக்ரே குற்றம்சாட்டியுள்ளார்.
மைத்திரிபால சிறிசேன அரசு மேற்கு நாடுகளுடன் கூட்டணி அமைத்ததால் அமெரிக்கா பின்வாங்குகிறது. சீனாவுக்கு ராஜபக்ச ஆதரவளித்ததால் அவர் அரசுக்கு எதிராக செயல்பட்டது அமெரிக்கா.
உள்நாட்டு விசாரணை என்ற நிலைப்பாடு பாதிக்கப்பட்டவர்களுக்கு விரோதமானது. தமிழர்கள் கொலைக்கு காரணமான மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் உயர் பதவியில் உள்ளனர் என்றார்.