இலங்கையின் பல்வேறு சிறைகளில் மரண தண்டனையை விதிக்கப்பட்ட 1115 கைதிகள் உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அவர்களில் 480 கைதிகள் மாத்திரம் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக மேல்முறையீட்டு செய்யாதவர்கள் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ரோஹான் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
வெலிகட, பொகம்பர, மஹர ஆகிய பல்வேறு சிறைச்காலைகளில் இவ்வாறு மரண தண்டனையை விதிக்கப்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களில் அதிகமானவர்கள் ஆண்கள் என தெரிவிக்கப்படுகின்றது. 1976ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தப்படவில்லை. இதுவரையில் அளுகோசு பதவி வெற்றிடமாக உள்ளமையினால் அதற்காக சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் சமீபத்தில் விணப்பம் கோரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.