இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையை கனடா வரவேற்றுள்ளது. இது தொடர்பாக கனடா அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் திட்டமிட்ட ரீதியில் இடம்பெற்ற வன்முறைகள், மற்றும் பெண்களிற்கெதிரான வன்முறை தொடர்பாக விபரங்களை ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பின் அறிக்கை வெளிக்கொணர்ந்துள்ளது. அண்மைக்காலமாக மேற்கொள்ளப்படும் முன்னெடுப்புக்கள் நம்பிக்கையைத் தருகின்றன.
இனங்கள் உளமார ஒண்றினைவதற்கும் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் சர்வதேசத்தின் பங்களிப்புத் தேவை என அவ்வறிக்கை தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளது. வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையானது, மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் இராஜதந்திர ரீதியில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.