காணாமல் போதல்கள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு, இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினது இணைத்தளத்தில் விடுவிக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நொவம்பர் மாதம் 9ம் திகதி முதல் 18ம் திகதி வரையில் இந்த குழு இலங்கையில் தங்கி இருந்து பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு ஏற்கனவே இலங்கைக்கு விஜயம் செய்ய பல தடவைகள் விண்ணப்பித்திருந்தது. எனினும் முன்னைய அரசாங்கம் இதற்கு அனுமதி வழங்க இருக்கவில்லை. எனினும் புதிய அரசாங்கம் குறித்த செயற்குழு உள்ளிட்ட ஐக்கிய நாடுகளின் முக்கிய முகவர்கள் மற்றும் அதிகாரிகளை இலங்கைக்கு விஜயம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது.