அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களுக்காக தங்கள் தயாரித்த தீர்மானங்கள் இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒப்படைக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒப்படைக்கவுள்ள குறித்த தீர்மானங்களில், 20 தீர்மானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானங்களை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் ஒப்படைத்து அதனை செயற்படுத்திக்கொள்வதற்கு எதிர்பார்ப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளதுள்ளது. அத்துடன் குறித்த தீர்மானங்கள் கல்வியாளர்கள் மற்றும் கலைஞர்கள் உட்பட பல தரப்பினர்களினால் தயாரிக்கப்பட்டதாக டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.