பாரிய ஊழல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த வாரம் மிகமுக்கிய அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். இவர்களை சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரணை செய்யவுள்ளனர்.
இந்தக்குழு, சாதாரண ஊழல் குற்றங்களை மாத்திரம் விசாரணை செய்யும் குழு என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதும் அதற்கு மி;க முக்கிய அரசியல்வாதிகளையும் விசாரணை செய்யும் அதிகாரம் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த குழுவுக்கு முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் முன்னாள் அரசாங்கத்தின் அதிகாரிகள் தொடர்பில் பல்வேறு ஊழல் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இந்த ஆணைக்குழுவின் மேல்நீதிமன்ற நீதிபதி பத்மன் சூரசேன, அமந்திரா விக்கும் களுவாராச்சி, கிஹான் குலதுங்க மற்றும் முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் பிரேமதிலக்க ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்