ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் எல்லா உறுப்பினர்களும் ஆளும்கட்சியில் இணைந்து கொண்டாலும் தாம் எதிர்க்கட்சியிலேயே அங்கம் வகிக்கப் போவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மக்கள் தேசிய அரசாங்கத்திற்கு செல்வதற்காக எமக்கு வாக்களிக்கவில்லை. ஆட்சியை கைப்பற்ற முடியாவிட்டால், எதிர்க்கட்சிகளின் பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு இன்றி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கூட்டு அரசாங்கம் அமைப்பதில் அர்த்தமில்லை. மக்கள் எமக்கு அதற்கான அனுமதியை வழங்கவில்லை. தேசிய அரசாங்கம் என்ற எண்ணக்கரு மக்கள் ஆணைக்கு புறம்பானதாகும். நான் எப்போதும் மக்கள் பக்கத்திலேயே இருக்கின்றேன்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டாலும் நான் எதிர்க்கட்சியிலேயே நிலைத்திருப்பேன் என பிரசன்ன ரணதுங்க, கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.