உள்நாட்டுபோரின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற யுத்தகுற்றங்கள் தொடர்பான விசாரணைக்காக இலங்கை ஜப்பான் நீதிபதியொருவரின் உதவியை பெறுவது என தீர்மானித்துள்ளது. ஜப்பான் பிரதமரின் வேண்டுகோளை தொடர்ந்தே இலங்கை இந்த முடிவை எடுத்துள்ளது.
தனது சமீபத்தைய ஜப்பான் விஜயத்தின்போது யுத்த குற்ற விசாரணைக்காக ஜப்பான் நீதிபதி மோட்டோ நொகுச்சியின் உதவியை பெறுமாறு ஜப்பான் பிரதமர் தன்னை கேட்டிருந்ததாக பிரதமர் சமீபத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிட்ட நீதிபதி மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் செயற்பாடுகளிற்கும் உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.