ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் மனநிலையும் மாறிவிட்டதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ருவாண்டாவில் போன்று இலங்கையிலும் இனப்படுகொலை இடம்பெற்றுள்ளதாக கூறும் அளவிற்கு ஐ. நா. செயலாளரின் மனநிலை மாறியுள்ளது. கடந்த ஆட்சி காலத்தின் போதும் ஐ.நா செயலாளரை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.
இதன் போது ருவாண்டாவை போன்று இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாவோ, இனப்படுகொலை இடம்பெற்றதாகவோ கூறவில்லை. எனினும், இன்று அவர் இலங்கையை ருவாண்டாவுடன் ஒப்பிட்டு பேசுகின்றார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவரின் மனநிலையும் மாறியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.