நீண்ட வறட்சியான காலநிலையின் பின்னர் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழையின் காரணமாக நீரில் மூழ்கியும், வேகமான காற்றினால் ஏற்பட்ட விபத்துக்களினாலும் மூவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு, மன்முனை வடக்கு பிரதேசத்தில் இருவர் நீரில் மூழ்கியும், யாழ்ப்பாணத்தில் வேகமாக வீசிய காற்றினால் மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
அதிக காற்றின் காரணமாக 4 வீடுகளுக்கு முழுமையான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 106 வீடுகளுக்கு சிறியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.