அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகரான மைக்கல் ஜாக்சன் கடந்த 2009 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமடைந்தார். அதன் பின்னர் அவரது குடும்ப மருத்துவர் கான்ராடு முர்ரே அளவுக்கு அதிகமான சக்தி வாய்ந்த மாத்திரை வழங்கியதுதான் அவர் இறப்பிற்கு காரணம் என்று கண்டறியப்பட்டது.
இந்நிலையில் ஜாக்சன் மகளான பாரிஸ் ஜாக்சன் கூறுகையில், எனது அப்பா கொலை செய்யப்பட்டுள்ளார். இது என் குடும்பம் மற்றும் பெரும்பாலான ரசிகர்கள் பலருக்கும் தெரியும்.
என் அப்பாவை திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். இது ஒரு சதியாக இருக்கலாம். காரணம் என் அப்பா பாடகராக இருந்த காலக்கட்டங்களில் ஏராளமான பாடகர்கள் நிறைய சிக்கல்களில் இருந்தனர். அவர்கள் நிலைமை மிகவும் வருந்ததக்க வகையில் இருந்தது.
மேலும் இது ஒரு சதுரங்க விளையாட்டு. இதை சரியான முறையில் விளையாடி வெற்றி பெற முயற்சிப்பேன். மேலும் என் அப்பாவுக்கு மர்மமான முறையில் நிறைய எதிரிகள் இருந்தனர்
இதில் நான் யாரையும் குறிப்பிடவில்லை ஆனால் இதை நினைக்கும் போதுஎனக்கு மிகவும் கடினமாக உள்ளது, இதற்கு மேல் தான் எதையும் கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.