இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 20 பேருக்கு, பிப்.,2 வரை சிறைக்காவல் நீட்டித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் கடற்கரையில் இருந்து ஜன. 4, 8 ஆகிய தேதிகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 20 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகளை தமிழக மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் வாய்தா நாளான நேற்று மீனவர்கள் 20 பேரும், இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
அவர்களை பிப்.,2ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி சபேசன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.