மைத்திரி- ரணில் அரசாங்கத்தினால் இராணுவத்தினர் காட்டிக் கொடுக்கப்படும் சம்பவங்கள் தொடர்வதாக விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி பதில் நேரத்தில், ஊடகவியலாளர் கீத் நொயார் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பிலே இராணுவ புலனாய்வுத் துறையினர் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக விமல் வீரவன்ச தெரிவித்தார்.
மேலும் கைது செய்யப்பட்ட ஐந்து இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் தாக்குதல் நடத்தப்பட்ட தினத்தன்று தெஹிவளை பகுதியில் நடமாடியமையால் கைது செய்யப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.