ஒரு பெண்ணாக இருந்தாலும் நான் எவருக்கும் அஞ்சப்போவதில்லை. அதற்கு அவசியமும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.
காலி நகரில் இன்று இடம் பெற்ற கூட்டு எதிர்க்கட்சியினரின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
அப்போது மகிந்த ராஜபக்சவின் படத்தை பிடித்துக் கொண்டு அதற்கு கீழே “நாம் உயிரே போனாலும் உங்களுடன் இருப்போம்” எனக் கூறிக்கொண்டு வாக்குகளை கேட்டுக் கொண்டு வந்தவர்கள்.,
கடைசியின் எமக்கு கிடைக்க வேண்டிய வாக்குகளை ஏமாற்றிப் பெற்றுக் கொண்டு வெற்றியடைந்தார்கள். ஆனால் இனி அது நடக்காது.
எப்படி இருந்தாலும் பெண் அரசியல் வாதியான நான் முதுகெழும்பு இருக்கின்ற காரணத்தால் நான் யாருக்கும் பயப்படப்போவதில்லை.
எனது ஆதரவு மகிந்தவிற்கே அந்தவகையில் மகிந்தவின் வெற்றியை காலிநகரில் இன்று ஒன்று கூடிய மக்கள் தொகை நிரூபித்துவிட்டது.
இன்று இந்த கூட்டத்தை கலைக்கவும் தடுக்கவும் ஆங்காங்கே உணவுகளும், குடிப்பதற்கு மதுவும் வழங்கிக் கொண்டு இருக்கின்றார்கள் ஆனால் அவற்றினால் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
ஆகவே மகிந்த ராஜபக்சவின் வெற்றியான எமது ஜனாதிபதியின் வெற்றி உறுதிசெய்யப்பட்டுள்ளது அதற்காக நாம் அனைவரும் கைகோர்ப்போம் எனவும் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.