பிரபாகனின் குழுக்கள் இன்று தாக்குகின்றன ஆனால் அவற்றை எதிர்கொள்ள மகிந்த ராஜபக்ச தயார் நிலையிலேயே இருக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
காலி நகரில் இடம் பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
பிரபாகரனைச் சார்ந்த குழுக்களும், தமிழ் பிரிவினைவாதிகளும் புலம்பெயர் தமிழர்களும், தனியார் அமைப்புகளும் ஒன்றாக இணைந்துள்ளனர்.
அப்படி இணைந்தவர்கள் இலங்கை இராணுவத்தையும், புலனாய்வு அதிகாரிகளையும், மகிந்த ராஜபக்சவையும் தொடர்ச்சியாக தாக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனால் அவ்வாறான தாக்குதல் எதனையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் திருப்பித் தாக்கி வெற்றி கொள்ள மகிந்த ராஜபக்ச தயாராக இருக்கின்றார்.
நாட்டை பிளவு படுத்தாமல் பிரபாகரனை அழித்து நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தவர் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே.
அப்படியான ஒரு தலைவர் மீண்டும் ஆட்சியை அமைக்க நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டியது நமது கடமையாகும்.
நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்கு அவரால் மட்டுமே முடியும் கடந்த காலங்களில் அதனை நிறைவேற்றிக் காட்டியவர் மகிந்த ராஜபக்சவே எனவும் பந்துல தெரிவித்தார்.