விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் சற்று முன்னர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
ரூபாய் 50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும், ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணையிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சரீர பிணைக்காக குடும்ப உறவினர் ஒருவர் முன்னிலையாக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனுடன் விமல் வீரவங்சவின் வெளிநாட்டுப் பயணம் தடை செய்யப்பட்டுள்ளதுடன், கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிப்பட்டுள்ளது.