ரொய்ட்டஸ் செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான பின்னணியில் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என எச்சரிக்கை விடுத்துள்ள அவர், இலங்கையில் முப்படையினர் மற்றும் காவல்துறையினரும் தீவிரவாத செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக பயனுள்ள நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் ரமழான் பண்டிகை ஆரம்பிப்பதற்கு முன்னர் மீண்டும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிலிட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.