மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் பல தொகுதிகளில் மூன்றாவதாக வந்துள்ளதை அடுத்து, கட்சி நிர்வாகிகளுக்கு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விருந்து அளித்தார்.

அப்போது பேசிய அவர், கட்சியில் பொறுப்புகளை வாங்கிக் கொண்டு வேலை பார்க்காதவர்களைப் பற்றி தனக்கு தெரியும் என்று கூறினார். தேர்தல் முடிந்து விட்டது என்று ஒதுங்கியிராமல் மக்கள் பிரச்சனைக்காக எந்த நேரமும் பணியாற்றத் தயாராக இருக்க வேண்டும் என்று கட்சியினரிடம் கூறிய கமல், அவ்வாறு பணியாற்ற முடியாதவர்கள் விலகிக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

தனக்கு இன்னொரு முகமும் உள்ளது என்று கூறிய அவர், செயல்படாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.