குளியாப்பிட்டியவை அண்டிய பிரதேசங்களில் முஸ்லிம் கிராமங்களை சோதனையிடுவது தொடர்பான பிரச்சினையே குழப்ப நிலைமைக்கு பிரதான காரணமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேக்கர தொிவிக்கின்றார்.
முஸ்லிம் கிராமங்களில் வாழும் மக்கள் சிங்களவர்கள் தம்மைத் தாக்க வருவதாகவும் சிங்கள மக்களை முஸ்லிம் கிராமங்களில் வாழும் மக்கள் தாக்க வருகிறார்கள் என்ற பயத்திலும் உள்ளனர் எனவும் அவர் தொிவிக்கின்றார்.
புலனாய்வுப் பிாிவினாின் தகவல்களின் அடிப்படையில் இரண்டு, மூன்று வீடுகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதாகவும் இந்நிலைமை காரணமாக சிங்கள மக்கள் அநாவசியமான சந்தேகங்களை வளர்த்துக் கொண்டதாகவும் தொிவித்தார்.
இந்த குழப்ப நிலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பிரதேச உறுப்பினர் என்ற வகையில் பாாிய முயற்சிகளை மேற்கொண்டதாகவும் எனினும், அதிகளவான மக்கள் காணப்பட்டமையினால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போனதாகவும் தொிவித்தார்.
இரு தரப்பினாிடையே காணப்படுகின்ற அவநம்பிக்கையை இல்லாதொழிப்பதற்கு உாிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் நேற்றைய தினம் (14) கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் தொிவித்தார்.