Published on
May 19 2019
, updated on
May 19 2019
By
lankatime
கடந்த வாரம் கூட்டு எதிர் கட்சியினால் வன்னி பாரளுமன்ற உறுப்பினரும் கைத்தொழி வணிக வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியூதீன் மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரனைக்கு ஆதரவு வழங்க வேண்டும் என மன்னார் மாவட்ட தமிழரசு கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கொண்டு வரப்பட்ட அவசரகால சட்டத்தை மேலும் நீட்டிப்பதற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பாகவும் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் மீது கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா பிரேரணை தொடர்பாகவும் எவ்வாறு பாராளுமன்றத்தில் தீர்மானம் மேற்கொள்வது என்பது தொடர்பாக மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உயர்மட்ட குழுவின் கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த கலந்துரையாடலின் போதே குறித்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளது