குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற தினத்திற்கு முந்தைய நாட்களில் அவர்களின் கைப்பேசிகளுக்கு கிடைக்கப்பெற்ற சுமார் 1800க்கும் அதிகமான அழைப்புக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை , உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் 66 பேரும் மற்றும் பயங்கரவாத விசாரணைப்பிரிவில் 21 பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்திருந்தார்.