தேசிய அடையாள அட்டை பெறுவதில் அதிகளவானோர் ஆர்வம் காட்டுவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவிக்கிறது காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

தினம்தோறும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைப்பதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவிக்கிறது. ஒருநாள் சேவையில் அடையாள அட்டைகளைப் பெறவேண்டுமாயின் விண்ணப்பதாரிகள் சமூகமளிப்பது அவசியமென ஆட்ப...திவு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சாதாரண சேவைமூலம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள பிரதேச செயலகங்கள் மூலம் விண்ணப்பிக்க முடியுமென ஆட்பதிவு திணைக்களம் தெரிவிக்கின்றது.