கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட காவற்துறை ஊடக பேச்சாளர் , காவற்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனை தெரிவித்தார்.
குறுகிய இலக்குகளை அடையவும், சமுதாயத்தில் அச்சத்தை ஏற்படுத்தும் நோக்குடனும் இந்த குண்டுகள் விட்டுச் செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த குண்டுகளை விட்டுச் சென்ற நபர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ள நிலையில் , அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் , குறித்த கைக்குண்டுகளை செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறை ஊடக பேச்சாளர் இதன்போது தெரிவித்தார்.