கொழும்பு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு நகரில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மட்டக்குளி உள்ளிட்ட கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகளில் இராணுவத்தினர் துருப்புக்காவி கவசவாகனங்கள், இயந்திரத் துப்பாக்கிகளுடன் ரோந்துக் காவலில் ஈடுபட்டுள்ளனர்.
இராணுவத்தின் சிறப்புப் படையின் உந்துருளிப் படையணியும் தீவிரமான ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.வழக்கத்துக்கு மாறாக அதிகளவு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று தொடக்கம், வாகனங்கள் அனைத்தும் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டு வருகின்றன.
இதனால் கொழும்பு நகரில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தாக்குதலில் இதுவரை 3 பேர் பலி? கடந்த. 48 மணித்தியாலய தாக்குதலில் இதுவரை 3 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன மேலும் பலியானோர்களின் எண்ணிக்கை அதிகரிகளாம் என்று கவலை தெரிவிக்கப்படுகின்றது.மேலும் இத்தாக்குதலில் இரு சிங்களவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இடம்பெற்ற நேற்றைய வன்முறைகளில் இதுவரை இருவர் உயிரிழந்துள்ளனர்.
புத்தளம் மாவட்டம், நாத்தாண்டிய, கொட்டாரமுல்லை பகுதியை சேர்ந்த அமீர் என்பவரும், கம்பஹா மாவட்டம் மினுவாங்கொடை பகுதியை சேர்ந்த பௌசுல் ஹமீத் என்பவருமே இவ்வாறு உயிரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.