சுமார் 70 இலட்சம் பெறுமதியுடைய ஹெரோயின் போதைப்பொருள் 1.5 கிலோ கிராம் உடன் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கட்டுபெத்த பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மொரட்டுவ, கட்டுபெத்த பிரதேசத்தில் சுமார் 70 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோவும் 127 கிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இரண்டு கைத் தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.