உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட தெரிவுக்குழு தொடர்பில் நம்பிக்கை இல்லை என ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
பொல்கஹவெல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்ட காரணங்களுக்கு அப்பால் தெரிவுக்குழு செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொருவர் மீது குற்றம் சுமத்தாமல் அதிகாரிகளுக்கு தீர்மானம் ஒன்றை எடுக்காததற்கான காரணம் தொடர்பில் கண்டறியுமாறு அவர் தெரிவித்துள்ளார்.