போலி அமெரிக்க டொலர்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொலர்களை வழங்குவதாக தெரிவித்து 8 இலட்சம் ரூபா பண மோசடி செய்த சம்பவம் தொடர்பில் குறித்த நபர் கொஹுவல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது குறித்த நபரிடம் இருந்து 100 டொலர் நாணயத்தாள்கள் 50 கைப்பற்றப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீரம்மா ஜீவரத்னம் எனும் தீலிபன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கொஹுவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்..
இருவேறு பகுதிகளில் இருந்து 250 கிராமிற்கு அதிகமான ஹெரோயினுடன் இருவர் கைது!
இருவேறு பகுதிகளில் இருந்து 250 கிராமிற்கு அதிகமான ஹெரோயினுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கேகாலை, புளத்கொஹூபிட்டிய பகுதியில் 200 கிராம் 260 கிராம் ஹெரோயினுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேகாலை, மிதெனிய பகுதியை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் பேலியகொட, வனவாசல் பகுதியில் 50 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.